அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பியவர் உயிரிழப்பு
சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் சுகிர்தராஜ் (64). அமெரிக்காவில் பணிபுரியும் மகனை பார்க்க சென்ற சுகிர்தராஜும், அவரது மனைவியும், அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு துபாய் வழியாக சென்னைக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்துகொண்டிருந்தனர்.விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, சுகிர்தராஜுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. விமானத்தில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.நேற்று காலை 8. 25 மணிக்கு சென்னையில் தரையிறங்க வேண்டிய இந்த விமானம், 20 நிமிடங்கள் முன்னதாகவே காலை 8. 05 மணிக்கு தரையிறங்கியது. தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் விமானத்துக்குள் சென்று பரிசோதனை செய்ததில், பயணி சுகிர்தராஜ் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.தகவல் அறிந்து வந்த விமான நிலைய போலீஸார் சுகிர்தராஜ் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags :