செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நீட்டிப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் டிசம்பர் 4ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 11வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்த படியே நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜரானார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதான செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு கடந்த 7 தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, அதிகாரிகள் சிகிச்சைக்காக ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சேர்த்தனர்.
Tags :