சிபிஐ அலுவலகத்தில் விஷால் ஆஜர்

by Staff / 28-11-2023 03:42:15pm
சிபிஐ அலுவலகத்தில் விஷால் ஆஜர்

விஷால் நடிப்பில், வெளியான மார்க் ஆண்டனி படத்திற்காக சென்சார் அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக கூறிய வழக்கில் நடிகர் விஷால் மும்பை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.மார்க் ஆண்டனி படத்தின் ஹிந்தி டப்பிங், மற்றும் வெளியீட்டிற்காக சென்சார் அதிகாரிகள் ரூ.6.5 லட்சம் பணம் கேட்டதாகவும், அதை இரண்டு தவணையாக தான் கொடுத்ததாகவும் விஷால் கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து சிபிஐ, தணிக்கை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via