மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

by Staff / 20-10-2022 04:31:25pm
மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55). வெற்றிலை கொடிக்கால் வேலை செய்யும் கூலி தொழிலாளி. இவரது மனைவி பங்கஜவள்ளி (50). இவர்களுக்கு சரவணன் (33), நாகராஜன்( 31) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ரவிச்சந்திரன் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் விரக்தியில் இருந்த ரவிச்சந்திரன் கடந்த 3 நாட்களாக வீட்டுக்கு வராமல் வெளியில் சுற்றி திரிந்து கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு மதுவுடன் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்து விட்டு பரமத்தி வேலூர் செல்லாண்டியம்மன் கோவில் எதிரே உள்ள ஒரு டீக்கடையின் முன்பு படுத்திருந்தார். இன்று காலை சுமார் 5 மணி அளவில் அந்த வழியாக வந்தவர்கள் பார்த்தபோது டீக்கடையின் முன்பு இவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். பின்னர் ரவிச்சந்திரன் மருந்து கொடுத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via