கடம்பூர் வனப் பகுதியில் பெண் யானை உயிரிழப்பு

by Staff / 29-11-2023 02:27:00pm
கடம்பூர் வனப் பகுதியில் பெண் யானை உயிரிழப்பு

சத்தி புலிகள் காப்பகம், கடம்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட, குத்தியாலத்தூர் வனப்பகுதியில் வனத்துறை அதிகாரிகள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குன்றி கொளஞ்சன் மடுவு என்ற இடத்தில் போது பெண் யானை ஒன்று இறந்து கிடப்பது கண்டறிந்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறை அதிகாரிகள் முன்பு வனக் கால்நடை டாக்டர் சதாசிவம், டபள்யூ.டபள்யூ.எப் கிருஷ்ண குமார், வனக்குழு தலைவர் மாரியயன் மற்றும் வனப்பணியாளர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் இறந்து கிடந்த பெண் யானைக்கு 35 வயது இருக்கலாம் எனவும், மற்ற விவரங்கள் பிறகு தெரிய வரும் என தெரிவித்தனர்.

 

Tags :

Share via