தாயின் உடலை ஓராண்டாக வீட்டில் வைத்திருந்த மகள்கள்..

by Staff / 30-11-2023 02:59:03pm
தாயின் உடலை ஓராண்டாக வீட்டில் வைத்திருந்த மகள்கள்..

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. உஷா திவாரி (52) என்ற பெண் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு லங்கா காவல் நிலையத்தின் மதேர்வா சித்துபூர் பகுதியில் உள்ள வீட்டில் இறந்துள்ளார். அவரது மகள்கள் பல்லவி (27), வைஷ்விக் (18) ஆகியோர் அவரது உடலை வீட்டிலேயே வைத்திருந்தனர். ஒரு வருடமாக தாயின் அழுகிய உடலுடன் ஒரே அறைக்குள் வாழ்ந்து வருகின்றனர். புதன்கிழமை, போலீசார் அழுகிய நிலையில் சடலத்தை அவர்களது வீட்டில் இருந்து மீட்டு உடற்கூறாய்வு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via