கறிக்கடை வியாபாரிக்கு அரிவாள் வெட்டு: போலீசார் விசாரணை..
பெரம்பூர் திம்மசாமி தர்கா தெருவைச் சேர்ந்தவர் முகமது பர்வேஷ். அரேபியன் கபாப் கறிக்கடை வைத்து வியாபாரம் செய்து வரும் இவர், அயல்நாட்டு பூனைகளையும் விற்று வந்துள்ளார்.நேற்று இரவு, அடையாளம் தெரியாத மூவர், முகமது பர்வேஷிடம் பூனை வேண்டும் எனக் கேட்டு, வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
அப்போது, திடீரென அவர்களில் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முகமது பர்வேஷின் தலையில் வெட்டியுள்ளார். உடனே, மூவரும் அங்கிருந்து தப்பினர்.முகமது பர்வேஷ் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தலையில் ஆறு தையல் போடப்பட்டது. சம்பவம் குறித்து, செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Tags :