இலங்கைக்கு 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்த அரசாணைக்கு தடை இல்லை உயர்நீதிமன்றம்

by Staff / 12-05-2022 03:59:46pm
இலங்கைக்கு 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்த அரசாணைக்கு தடை இல்லை உயர்நீதிமன்றம்

இலங்கைக்கு வழங்குவதற்காக அதிக விலைக்கு 40 ஆயிரம் டன் அரிசி கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்து அரசாணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஜெய்சங்கர் என்பவர் தாக்கல் செய்த மனுவில் இந்திய உணவு கழகம் ஒரு கிலோ அரிசி 20 ரூபாய்க்கு விற்கும் நிலையில் தமிழக அரசு 33 ரூபாய் 50 காசுகள் என்னும் அதிக விலைக்கு தனியாரிடம் வாங்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் அனுமதியுடன் தான் அரசு அனுப்பப்படுவதாக அவசர நிலை காலத்தில் கொள்முதல் செய்ய டெண்டர் வெளி வெளிப்படைத்தன்மை சட்டத்தில் விலக்கி உள்ளதாகும் தமிழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via