4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு

by Staff / 06-12-2023 02:23:47pm
4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு


'மிக்ஜாம்' புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் பாதிக்கபட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை தொடங்க இருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு திட்டமிட்டப்படி தேர்வுகள் நடைபெறும். வெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களில் நிலைமை சீரானவுடன் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி நாளை (7.12.2023) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

 

 

Tags :

Share via