அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்தி உதவிகளை செய்ய.-.நடிகர் விஜய் வேண்டுகோள்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிக்ஜாம் புயல் கனமழை காரணமாக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றி போதிய அடிப்படை வசதிகளின் இன்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன .வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைதளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன. இவ்வேளையில், மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்று சமூக வலைத்தளமான எக்ஸ் பதிவில் நடிகர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags :