துபாயில் இருந்து 303 இந்தியர்களுடன் நிகரகுவா நாட்டுக்கு சென்ற விமானம் பிரான்ஸில் தரையிறங்கிய சம்பவத்தில் அதிர்ச்சித் தகவல்கள்.

by Editor / 24-12-2023 10:17:50pm
துபாயில் இருந்து 303 இந்தியர்களுடன் நிகரகுவா நாட்டுக்கு சென்ற விமானம் பிரான்ஸில் தரையிறங்கிய சம்பவத்தில் அதிர்ச்சித் தகவல்கள்.

துபாயில் இருந்து 303 இந்தியர்களுடன் நிகரகுவா நாட்டுக்கு சென்ற விமானம் பிரான்ஸில் தரையிறங்கிய சம்பவத்தில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன!

துபாயில் இருந்து தனியார் விமானத்தை பிரத்யேகமாக வாடகைக்கு அமர்த்தி நிகரகுவா சென்று, அங்கிருந்து சட்டவிரோதமாக அமெரிக்கா, கனடா செல்ல திட்டமிட்டுள்ளனர். அவர்களை தடுத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமானத்தில் பயணித்த இந்தியர்களில் சிலர் தமிழ் பேசுவதாக விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களா? அல்லது இலங்கையை சேர்ந்தவர்களா என தொடர்ந்து விசாரணை நடக்கிறது!

பெரும்பாலானோர் இந்தி உள்ளிட்ட வட மாநில மொழிகளை பேசுவதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. 303 பேரில் 2 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை!

முதற்கட்ட விசாரணையில் விமானத்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் இந்தியர்கள் என தெரிய வந்துள்ளது. அதிலும் குஜராத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் உள்ளனர். 

ஒரே நேரத்தில் 303 பேர் ஒரே விமானத்தில் வந்ததன் நோக்கம் என்ன? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது!

 

Tags : Shocking information has been revealed in the incident of the flight to Nicaragua landing in France!

Share via