பட்ட பகலில் வீடுபுகுந்து மூதாட்டியை தாக்கி விட்டு ஐந்து வயது பெண் குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர்கள்

by Editor / 04-07-2022 02:06:44pm
பட்ட பகலில் வீடுபுகுந்து மூதாட்டியை தாக்கி விட்டு ஐந்து வயது பெண் குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர்கள்

வேலூர் அருகே பட்ட பகலில் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி விட்டு ஐந்து வயது பெண் குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த பிரியா என்பவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது தாயுடன் வசித்து வருகிறார் இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த அவரது தாயார் சரமாரியாக தாக்கி விட்டு மர்ம நபர்கள் குழந்தையை கடத்திச் சென்றனர். தனது கணவர் ரவி யாதவ் தான் ஆள் வைத்து குழந்தையை கடத்தி இருக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு முன் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via