வெள்ள பாதிப்பை பிரதமர் தொடர்ந்து கவனிக்கிறார் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
வெள்ள பாதிப்புகளை பிரதமர் மோடி தொடர்ந்து கவனித்து வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், சென்னை வந்துள்ளார். அப்போது பேசிய அவர்; சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை பிரதமர் மோடி தொடர்ந்து கவனித்து வருகிறார். புயல் தாக்கியவுடன் ராணுவம், NDRF போன்றவற்றை பிரதமர் சென்னைக்கு அனுப்பியதாகவும், அவரது உத்தரவின் பேரிலேயே தற்போது சென்னையை ஆய்வு செய்திருப்பதாகவும் ராஜீவ் கூறினார்.
Tags :