பணபலத்தால் கிரிக்கெட் உலகை தன் பிடியில் வைத்துள்ளது இந்தியா- இம்ரான் கான்

by Editor / 12-10-2021 07:21:54pm
பணபலத்தால் கிரிக்கெட் உலகை தன் பிடியில் வைத்துள்ளது இந்தியா- இம்ரான் கான்


பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்தியா கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ மீது கடும் விமர்சனங்களை முன்வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் ரமீஸ் ராஜா அண்மையில் கூறியதாவது, இந்தியா நினைத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை ஒன்றுமில்லாமல் செய்து விட முடியும் என்றும். இதனையடுத்து பாகிஸ்தான் பிரதமரும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனுமான இம்ரான் கானும், கிரிக்கெட் உலகம் என்ற பொம்மலாட்ட நூல் இந்தியாவின் கையில் உள்ளது, பணபலம் தான் அதற்கு காரணம் என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் நியூசிலாந்து அணி, ‘கொஞ்சம் இருங்க இந்த முக்கு வரைக்கும் போயிட்டு வந்துடறோம்னு’ சொல்லி ஊரைப்பார்க்கச் சென்றனர், இங்கிலாந்தும் பயந்து போய் நாங்க வரலைப்பா என்று ஒதுங்கிக் கொண்டனர், நியூசிலாந்து பாதியிலேயே ஒடிப்போனதற்குக் காரணம் இந்தியா கிளப்பி விட்ட பீதிதான் என்று பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் கிரிக்கெட் தலைகள் குற்றம்சாட்டின.இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உலக கிரிக்கெட்டின் நிதியாதாரப் பிடி இந்தியா கையில் உள்ளது, எனவே கிரிக்கெட்டை அவர்கள் ஆட்டிப்படைக்கின்றனர் என்று சாடியுள்ளார்.  


தனியார் ஊடகத்துக்கு பேசிய அவர், இங்கிலாந்து தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொண்டனர். அதாவது பாகிஸ்தானுடன் ஆடுவதன் மூலம் இந்த நாட்டுக்கு ஏதோ பெரிய சாதகம் செய்து விடும் நினைப்பில்தான்  இங்கிலாந்து போன்ற நாடுகள் இன்னமும் கருதுகின்றன. இதற்கு ஒரு காரணம் பணம். பணம்தான் கிரிக்கெட்டை ஆள்கிறது, பணத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் ஆள்கிறது, அதனால் உலக கிரிக்கெட்டை இந்தியா ஆள்கிறது, இதுதான் விஷயம். எனவே பாகிஸ்தானை செய்வது போல் இந்தியாவைச் செய்ய இங்கிலாந்து, நியூசிலாந்துக்கு துணிச்சல் இருக்கிறதா என்றால் இல்லை. காரணம் பணம். இந்தியா நிறைய பணம் சம்பாதித்து கொடுக்கிறது.என்று கூறினார்.

 

Tags :

Share via