ராமேஸ்வரம் மீனவர்கள் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு 

by Editor / 23-03-2024 10:01:59am
ராமேஸ்வரம் மீனவர்கள் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு 

 காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர். தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், விசைப்படகுகளையும் மீட்டுத் தரக்கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்களை மீட்காத பட்சத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை ஒப்படைத்து மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாகவும் அறிவித்துள்ளனர். கடந்த தினம் 32 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது.

 

Tags : ராமேஸ்வரம் மீனவர்கள் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு 

Share via