லாரி மோதி இரண்டு  வாலிபர்கள் பலி ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

by Editor / 11-12-2023 09:10:24am
லாரி மோதி இரண்டு  வாலிபர்கள் பலி ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் பகுதியை சார்ந்தவர்கள் விக்கி,சபரி விஜயபாஸ் ஆகிய மூவரும் புதுச்சேரியிள் இருந்து திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தனது இருசக்கர வாகனத்தில் தைலாபுரம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர. அப்பொழுது 
காட்ராம்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென விறகு ஏற்றி கொண்டு வந்த லாரி குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது.இதில்  இருசக்கர வாகனம் லாரி மீது மோதியது சம்பவ இடத்திலேயே விக்கி மற்றும் சபரி இருவரும் பலியாகினர். மேலும் பலத்த காயம் அடைந்த விஜயபாஸை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து நடந்து பல மணி நேரங்கள் ஆகியும் ஆம்புலன்ஸ் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் புதுச்சேரி திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முற்பட்டனர். சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களுக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது..சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் இரு இளைஞர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags : லாரி மோதி இரண்டு  வாலிபர்கள் பலி ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

Share via