நடிகர் ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜர்

by Staff / 12-12-2023 02:45:37pm
நடிகர் ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜர்

ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவன மோசடி வழக்கில், துபாயில் நீண்ட காலமாக தலைமைறைவாக இருந்த நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். துபாயில் தலைமறைவாக இருந்த ஆர்.கே.சுரேஷ் இரு நாட்களுக்கு முன் சென்னை திரும்பிய நிலையில், இன்று அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. ஆருத்ரா நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிக வட்டி தருவதாக கூறி பணம் வசூலித்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், ஆர்.கே.சுரேஷ் மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via