டாஸ்மாக் கடைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு

by Admin / 11-03-2022 02:25:33pm
டாஸ்மாக் கடைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு

டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும் என்று, அனைத்து சில்லறை விற்பனை கடைகளுக்கும் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் சார்பில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் உயர்ரக மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பில் புத்தகம், தினசரி சட்டா, சரக்கு இருப்பு மற்றும் விற்பனை உள்ளிட்ட 21 பதிவேடுகளை முறையாக நாள்தோறும் பராமரிக்க வேண்டும்.

ஆய்வின் போது இந்த ஆவணங்கள் பராமரிக்கப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விற்பனையாகும் மதுபானங்கள் மற்றும் பீர் வகைகளுக்கு கட்டாயம் வாடிக்கையாளர்களுக்கு ரசீது வழங்க வேண்டும்.
 
அந்த ரசீதில் மதுபானத்தின் பெயர், அளவு, அரசு நிர்ணயித்த விலை மற்றும் கடை ஊழியர்களின் கையொப்பம் இருக்க வேண்டும். மதுபானங்களின் விலைப்பட்டியல் வாடிக்கையாளர்களுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via