பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்-கூடுதல் கட்டணம் வசூலிப்பு.

by Editor / 14-12-2023 10:38:06am
பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்-கூடுதல் கட்டணம் வசூலிப்பு.

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு செல்வோர் அரசு பேருந்துகளில் 13 ஆம் தேதி  முதல் முன்பதிவு செய்யலாம்.டிக்கெட் முன்பதிவு மையங்களில் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.மேலும் விவரங்களுக்கு - http://tnstc.in- என்ற இணையத்தளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம் என அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் பல முன்பதிவு மையங்களில் அரசு நிர்ணயம்செய்த கட்டணங்களைவிட கூடுதலாக கட்டணங்களை அரசு போக்குவரத்துக்கழக முன்பதிவு மையங்களில் பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

 

Tags : பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்-கூடுதல் கட்டணம் வசூலிப்பு.

Share via