பெண்களை வைத்து விபச்சாரம்- இருவர் கைது

by Staff / 16-12-2023 03:26:36pm
பெண்களை வைத்து விபச்சாரம்- இருவர் கைது


கோவை மாவட்டம் குனியமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், குனியமுத்தூர் போலீசார் நேற்று கோகுலம் காலனி சென்று சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விபசாரம் நடத்திய புரோக்கர்கள் மதுக்கரையை சேர்ந்த 30 வயதான சிக்கந்தர் பாஷா மற்றும் கோவைப்புதூரை சேர்ந்த 42 வயதான பிருந்தா ஆகிய இருவரை கைது செய்தனர்.பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via