விபத்தில் சுக்குநூறாக நொறுங்கிய கார் - 6 பேர் பலி

by Staff / 16-12-2023 03:29:02pm
விபத்தில் சுக்குநூறாக நொறுங்கிய கார் - 6 பேர் பலி

நாக்பூரில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரின், கடோல்-கல்மேஷ்வர் புறநகர் சாலையில் உள்ள சோன்காம்ப் கிராமத்திற்கு அருகே நேற்றிரவு 7 பேர் காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த சரக்கு லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கார் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த 7 பேரில் 6 பேர் சிகிச்னையின்போது அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

 

Tags :

Share via