தூத்துக்குடி கிராமங்களின் நிலை கவலையளிக்கிறது: மாரிசெல்வராஜ்

by Staff / 19-12-2023 12:31:44pm
தூத்துக்குடி கிராமங்களின் நிலை கவலையளிக்கிறது: மாரிசெல்வராஜ்

சென்னை: தூத்துக்குடி கிராமங்களின் நிலை கவலையளிக்கிறது என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறன. ஸ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. மீட்பு வாகனங்களால் படகுகளால் உள்ளே செல்ல முடியவில்லை. வெள்ளத்தின் வேகம் அப்படியிருக்கிறது. இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை. அரசு எதன் வழியாவது மீட்பு பணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via