மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
திரைப்பிரபலங்கள் த்ரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி எதிராக நடிகர் மன்சூர் அலிகான் மானநஷ்ட ஈடு வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மனித இயல்பு. நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறி மன்சூர் அலிகானின் மனுவை தள்ளுபடி செய்து ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, இந்த தொகையை இரண்டு வாரங்களில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த உத்தரவிட்டது.
Tags :