,திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி

by Admin / 23-12-2023 09:18:31am
 ,திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி

மார்கழி திங்கள் வைகுந்த ஏகாதேசி என்னும் சொர்க்கவாசல் திறப்பு இன்று அனைத்து வைணவ தளங்களிலும் வெகு கோலாகலமாக நடந்தேறி வருகிறது. சென்னை ,திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இரவில் இருந்தே பக்தர்களினுடைய கூட்டம் அதிக அளவில் கூட ஆரம்பித்தது. அதிகாலை 3..30 இல் இருந்து சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஆரம்பமானதிலிருந்து பக்தர்களுடைய பக்தி பரவச காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்தன

. மார்கழி -பெருமாளுக்கு உரிய காலம். அதிலும் சனிக்கிழமை அவருக்குரியதாகும். அந்த நாளில் வரும், இந்த பரமபத சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, பக்தர்களுக்கு எல்லாம் ஒரு முக்கிய வாழ்வின் வரமாக வந்தமைந்த நாள்.

  இன்று,.... ஓர் ஆண்டில் பெருமாளை தரிசித்த புண்ணியமும் அருளும்- இந்த ஒரு நாளில் சென்று  சேவித்தாலே அத்தனை புண்ணியங்களும் சேர்ந்து பாவங்கள் எல்லாம் கரைந்து ஓடும் என்று காலகாலமாக சொல்லப்பட்டு வருகின்ற உண்மை.

காக்கும் கடவுளான பெருமாள் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு, தன்னை தரிசிப்பதற்கான வாசலை திறந்து விடுவதாக தான் இது ஐதீகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. யாரெல்லாம், இந்த மண்ணில் புண்ணியங்களை செய்தார்களோ அவர்களெல்லாம் பெருமாள் கைபிடி த்து தான் இருக்கும் வைகுந்தத்திற்கு அழைத்துச் செல்வார் என்பது தான் நம்பிக்கை .அதன் பொருட்டே, பக்தர்கள் பெருமாளை தரிசிப்பதற்காக பக்தி பிழம்பாக , ஒவ்வொரு வைணவ தளங்களில் அலை மோதி கொண்டிருக்கிறார்கள். அனைவரும் பெருமாளின் நல் ஆசியையும் அருளையும் பெற்று வாழ்வார்களாக....

 

 ,திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி
 

Tags :

Share via