ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்ற இந்திய மாணவர் சங்க மாணவர்கள் கைது.

by Editor / 23-12-2023 09:07:56am
ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்ற இந்திய மாணவர் சங்க மாணவர்கள் கைது.

நீட் மசோதாவிற்கு கையெழுத்து இடாத ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்ற இந்திய மாணவர் சங்க மாணவர்கள் கைது

நாகூர் தர்காவிற்கு செல்வதற்காக தமிழக ஆளுநர் திருவாரூர் வழியாக இன்று செல்கிறார். இந்த நிலையில் ஆளுநர் ஆர் என் ரவி நீட் மசோதா உள்ளிட்ட மசோதாவிற்கு கையெழுத்திடாமல் தமிழகத்திற்கு எதிராகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் செயல்படுவதாக கூறி இந்திய மாணவர் சங்கத்தினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிப்பதற்காக இருந்த நிலையில் முன்கூட்டியே காவல்துறையினர் இந்திய மாணவர் சங்க அமைப்பைச் சேர்ந்த மாணவர்களை கைது செய்து காவல் துறை வாகனத்தில் ஏற்றி வைத்துள்ளனர்.

 

Tags : ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்ற இந்திய மாணவர் சங்க மாணவர்கள் கைது

Share via