கிறிஸ்துமஸ் பண்டிகை: 8000 போலீசார் பாதுகாப்பு பணி...

by Staff / 23-12-2023 05:37:14pm
கிறிஸ்துமஸ் பண்டிகை: 8000 போலீசார் பாதுகாப்பு பணி...

கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட 8, 000 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் முலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். இயேசு கிறிஸ்து அவதரித்த நாளே கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்துவை உலகிற்கு வரவேற்பதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் தயாராகி விடுவார்கள். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுப்படுத்தும் விதமாக கிறிஸ்துமஸ் திருநாளன்று கிறிஸ்தவர்கள் அனைவரும் தேவாலயத்திற்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை நடத்துவதுடன், வீடுகளிலும் நட்சத்திரங்களை தொங்க விட்டு, கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரித்து, கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவார்கள்.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சென்னையில் 8, 000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சுமார் 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவித்துள்ளார். துணை ஆணையர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையர்கள் தலைமையில் 8, 000 போலீசார் விரிவான பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. காவல்துறையின் பாதுகாப்பு பணிக்கு உதவியாக ஊர்க்காவல் படையினரும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via