நீரில் முழ்கி பள்ளி மாணவன் பலி

by Staff / 03-01-2024 12:35:40pm
நீரில் முழ்கி பள்ளி மாணவன் பலி

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பெரிய ஊர்சேரியைச் சேர்ந்த ஜான் கென்னடி மகன் தேவா (14). என்பவர் அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.இவர், புத்தாண்டு விடுமுறையையொட்டி, நேற்று முன்தினம் மாலையில் வெளியில் சென்றவர் இரவு வரை வீட்டுக்குத் திரும்பவில்லை. பெற்றோர் அவரைத் தேடிய நிலையில், பெரியாறு கால்வாய்க்கு தேவா குளிக்கச் சென்றதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இதையடுத்து. கால்வாய் பகுதியில் குடும்பத்தினர், கிராமத்தினர் தேடி பார்த்தனர்.இந்த நிலையில், 15 பி. மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள பெரியாறு கால்வாயில் தேவாவின் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது இந்த. தகவலறிந்து வந்த அலங்காநல்லூர் போலீசார் உடலை மீட்டு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via