அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். 2016-2021 அதிமுக ஆட்சிக்காலத்தில் வருமானத்தைவிட அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. வழக்கின் விசாரணைக்காக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சி.விஜயபாஸ்கர் ஆஜராகினார். இந்த நிலையில், இவ்வழக்கு விசாரணை வரும் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.2021ஆம் ஆண்டு விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறையினர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
Tags :