இளைஞர் ஓட ஓட துரத்தி குத்திக் கொலை
தலைநகர் டெல்லியில் இளைஞர் ஒருவரை அடித்துக் கொலை செய்துள்ளனர். அதுதொடர்பான அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு இந்தக் கொடூரம் நடந்துள்ளது. கவுரவ் (22) என்ற இளைஞரை ஓட ஓட துரத்தி மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். பின்னர் அவரை கண்மூடித்தனமாக கத்தியால் குத்தியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் உயிரிழந்தார். வீடியோ ஆதாரங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags :