முதலமைச்சரே எட்டாயிரம் ரூபாய் கொடுத்து விட்டார். பொங்கலுக்கு யாரையும் நான் எதிர்பார்க்கத் தேவையில்லை.

by Admin / 12-01-2024 06:15:21pm
 முதலமைச்சரே எட்டாயிரம் ரூபாய் கொடுத்து விட்டார். பொங்கலுக்கு யாரையும் நான் எதிர்பார்க்கத் தேவையில்லை.

 என் பேரன்பிற்குரிய, ஆயலக நாடுகளில் வாழும் தமிழ் சொந்தங்களே ! உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம். எனக்கு உடல் நலமில்லை உற்சாகமாக இல்லை என்று நேற்று ஒரு பத்திரிக்கையில் எழுதி இருந்தார்கள். அதை படித்த போது எனக்கு சிரிப்பு தான் வந்தது. எனக்கு என்ன குறை.

தமிழ்நாடு ,தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக இருக்கின்ற போது அதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும். நேற்று ஒரு வீடியோ பார்த்தேன்

. சென்னையில் சேர்ந்த ஒரு சகோதரி பேசுகிறார்கள். கலைஞர் மகளிர் உரிமைத் தொகையில் ஆயிரம் ரூபாய் வந்துவிட்டது. பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வந்துவிட்டது. அரிசி, சர்க்கரை கரும்பு, வந்துவிட்டது. வெள்ள நிவாரணமாக 6 ஆயிரம் ரூபாய் கிடைத்துவிட்டது.ஒரு மாதத்தில் முதலமைச்சரே எட்டாயிரம் ரூபாய் கொடுத்து விட்டார். பொங்கலுக்கு யாரையும் நான் எதிர்பார்க்கத் தேவையில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த சகோதரி. அவர் முகத்தில் பார்க்கின்ற மகிழ்ச்சி தான் எனக்கான உற்சாக மருந்து. எனக்கு மக்களைப் பற்றி தான் எப்பொழுதும் நினைப்பே தவிர என்னைப் பற்றி இருந்ததில்லை. எந்தச் சூழலிலும் மக்களோடு இருப்பவன் நான். என் சக்தியை மீறியும் உழைப்பவன் நான். இது மாதிரியான செய்திகளை ஒதுக்கி தள்ளி விட்டு உழைத்துக் கொண்டே இருப்பேன்

..அண்மையில், இதே அரங்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு என்பது தமிழ்நாட்டை வளப்படுத்த உலகமே திரண்ட மாநாடு என்று சொன்னால், இன்று நடைபெறுவது உலகத்தை வளப்படுத்த சென்றதமிழர்களை கொண்டாடும் மாநாடு இந்த மாநாட்டுக்கு கிடைத்த மாபெரும் சிறப்புகளில் ஒன்று. சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் மாண்புமிகு சண்முகம் அவர்கள் இங்கு வருகை தந்திருப்பது அவர் உலக புகழ்பெற்ற தமிழன் மட்டுமல்ல உலகமே கவனிக்கின்ற பதவியில் இருக்கும் தமிழன். நான் சிங்கப்பூர் சென்ற போது நான் தங்கிய இடத்திற்கே வந்து எனக்கு சிறப்பு செய்தார். நேற்று அவரை என்னுடைய வீட்டிற்கே வரவழைத்து மகிழ்ந்தேன்.. அவரை இன்றும் என்றும் வாழ்த்தி வரவேற்கிறேன் .அவரைப் போலவே இந்த மேடையில் உலகம் எங்கும் பல நாடுகளில் இருக்கக்கூடிய பல்வேறு பொறுப்புகளில் அறிவால் ஆற்றலால் தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக அமர்ந்திருக்கும் அனைவரையும் நான் உள்ளபடியே வரவேற்கிறேன் .வாழ்த்துகிறேன். அனைவரது வருகைக்கும் முதலில் என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன் மேடையிலும் நேரிலும் அமர்ந்திருக்கும் உங்களை எல்லாம் பார்க்கும்போது எனக்கு பெருமையாக இருக்கிறது. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற உழைப்பு திறந்தால் கடல் கடந்தும் தமிழர்கள் வெற்றிகரமாக வாழ காரணம் இப்படி புலம்பெயர்ந்த நம் தமிழ் சொந்தங்கள் அந்த நாடுகளுடைய வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் முதுகெழும்பாக இருந்து வருகிறார்கள்.

. தமிழின தலைவர் கலைஞர் அவர்களால் 2010 ஆம் ஆண்டு வெளிநாடு வாழ் தமிழர்களுடைய துயரங்கள் களைய வெளிநாடு வாழ் தமிழர் நலப் பிரிவு உருவாக்கி அரசாணை வெளியிட்ட பட்டதோடு வாரியம் அமைக்கவும் சட்ட முன் வடிவம் உருவாக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து வந்த ஆட்சி மாற்றம் காரணமாக இந்த முயற்சிகளில் தடை ஏற்பட்டது. .ஆனால் இப்போது அமைந்திருக்கின்ற நம்முடைய திராவிட மாடல் அரசு தேர்தல் அறிக்கையில் சொன்னபடியே தமிழர் நலனுக்கென்று தனியாக ஒரு துறையை உருவாக்கி தனி அமைச்சரையும் நியமித்து உங்களுடைய அவசர தேவைகள் உடனுக்குடன் சிறப்பான முறையில் தீர்த்து வைக்கப்பட்டு வருகிறது.. ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களைக் கொண்ட அழகு தமிழர் நலவாரியம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த துறையும் வாரியும் சிறப்பாக செயல்பட்டு கொண்டு வருகிறார்கள்

. வெளிநாடுகளில் நிரந்தர குடியுரிமை உள்ள தமிழர்களுடைய குழந்தைகளுக்கு தமிழ் மீது ஆர்வத்தை உருவாக்கி தமிழ் இணைய கல்விக் கழகம் மூலமாக தமிழ் கற்றுத் தரப்படுகிறது வெளிநாடுகளில் கைது செய்யப்படுகின்ற சூழலுக்கு ஆளாகின்ற தமிழர்களுக்கு உரிய சட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது .அயல்நாடுகளில் உதவி தேவைப்படுகின்ற தமிழர்களுக்கு ஒன்றிய அரசின் வெளிவரவு அமைச்சகம் மற்றும் தொடர்புடைய இந்திய தூதருடன் இணைந்து உரிய நிவாரண நடவடிக்கைகளை இந்த துறை சிறப்பாக செய்து வருகிறது. மருத்துவ இயலாமை மற்றும் பல்வேறு காரணங்களால் தாயகம் திரும்ப முடியாமல் கஷ்டப்படுகின்ற தமிழர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்துக்கொண்டு வரவும் .அங்கு இறக்க நேரிடும் தமிழர்களின் உடல்களை இந்தியா கொண்டு வரவும் தமிழ்நாடு அரசால் ஒரு கோடி ரூபாய் சுழல்நிதி ஏற்படுத்தப்பட்டு தமிழர்களுடைய துயரங்கள் துடைக்கின்ற பணி உரிய முறையில் செய்யப்பட்டு வருகிறது, முகவர் மீதான புகார் நில அபகரிப்பு புகார் தொடர்பான 51 இனங்களில் தீர்வு காணப்பட்டு இருக்கிறது,

பாதுகாப்பான புலம் பெயர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி மற்றும் தொழிற்கல்வி நிலையங்களில் விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்பட்டு இருக்கிறது ,அயல்நாட்டில் வசிக்கின்ற நம்முடைய தமிழர்கள் இங்கு இருக்கின்ற அவர்களுடைய குடும்பத்தினர் எதிர்கொள்கின்ற நிலம் மற்றும் பாதுகாப்பு தொடர்பானபிரச்சனைகளை களைய டி,ஜி,பி அலுவலகத்தில் தனி பிரிவு அமைக்கப்பட்டிருக்கிறது, அயல்நாடுகளுக்கு செல்கின்ற தமிழர்களுக்கு அந்த நாடுகளில் சட்டம் பண்பாடு மற்றும் மொழி தொடர்பான குறைந்தபட்ச புரிதலை உருவாக்க mசென்னையில் முன் பயண புத்தக பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது, இப்போது தஞ்சாவூர் புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, பெரம்பலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இந்த மையம் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் என்று பல்வேறு நாடுகளில் இருக்கின்ற நம்முடைய தமிழர்கள் அங்கு எதிர்பாராத விதமாக பிரச்சனைகளை சந்திக்கின்ற போது தமிழ்நாடு அரசு விரைவாக செயல்பட்டு பத்திரமாக அழைத்துக் கொண்டு வந்திருக்கிறது .அயல்நாடுகள் மட்டுமல்லாமல் மணிப்பூர் கலவரம் அமர்நாத் பணிச்செல்வி போன்ற இந்தியாவில் பிற மாநிலங்களில் ஏற்படுகின்ற இயற்கை ஏற்ப இடர்பாடும் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளிலும் தமிழர்களை பாதுகாப்பாக மீட்பதில் கண்ணும் கருத்துமாக நாங்கள் செயல்பட்டதை நீங்களே பார்த்தீர்கள். .புலம்பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த எனது கிராமம் திட்டம் துவக்கப்பட்டிருக்கிறது

.. வெளிநாடு வாழ் தமிழர்கள் பெரும்பாலானவர்கள் தங்களுடைய சேமிப்பை தமிழ்நாட்டில் பாதுகாப்பாக முதலீடு செய்ய ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி இவர்கள் முதலீடு அரசு மற்றும் தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்ய ஏதுவான சூழலையும் உருவாக்கி இருக்கிறோம்

. ஒவ்வொரு ஆண்டு ஜனவரி 12ஆம் நாள் அழகத் தமிழர் நாளாக கொண்டாடப்படும் என்ற அறிவிக்கப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பாக தொடர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.. கடந்த இரண்டு நாட்களாக உலக தமிழினத்தின் மாநாடு போல சீரும் சிறப்பாக இது நடந்து கொண்டு வருகிறது.. வேர்களைத் தேடி என்பது இந்த ஆண்டுக்கான முத்தாய்ப்பான திட்டமாக அமைந்திருக்கிறது ஆண்டுதோறும் 200 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பண்பாட்டு சுற்றுலா அழைத்துக்கொண்டு செல்வதற்கு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி 58 இளைஞர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்து டிசம்பர் 27ஆம் தேதி முதல் ஜனவரி 10ஆம் தேதி வரை 15 நாட்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற கலை இலக்கியம் பண்பாடு பலம் பெறும் கட்டடம் வணிகம் விடுதலைப் போராட்டத்தில் நம்முடைய பங்கேற்பு ஆடைகள் தயாரித்தல். அணிகலன்கள் செய்து. எந்த தமிழர்களின் அனைத்து மாண்புகளையும் பார்த்துக் கொண்டு வந்து அவர்களுடைய அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொண்டார்கள்

.. இதில் இந்த திட்டத்தின் வெற்றியை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இந்த ஆண்டின் ஐலகத் தமிழர் நாள் கொண்டாட்டம். தமிழ் வெல்லும் என்ற சிறப்பான கற்பூரம் கொண்டு மிக எழுச்சியோடு 50க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இருந்து வந்திருக்கின்ற எல்லோருடைய பங்கேற்போடும் மிக சிறப்பான முறையில் நடந்து கொண்டிருக்கிறது.. தாய் தமிழ் நாட்டின் முதலமைச்சராக மட்டுமில்லாமல் ஒரு தமிழனாகவும் இதை பார்த்து நான் அக மகிழ்கிறேன்

. நிலமும் நிலத்தாலும் ஏன்நாடுகளாலும் கண்டங்களாலும் பிரிந்து இருந்தாலும் நாம் எல்லோரும் ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள். தமிழ் அன்னையின் குழந்தைகள். அந்த உரிமையுடன் உங்கள் சகோதரனாக நான் உங்களிடம் வைக்கின்ற வேண்டுகோள்..எங்கு வாழ்ந்தாலும் தாய் தமிழ்நாட்டை மறக்காதீர்கள். .அடிக்கடி உங்கள் குழந்தைகளோடு தமிழ்நாட்டிற்கு வாருங்கள். கீழடி பொருனை, ஆதிச்சநல்லூரை காட்டுங்கள் தமிழோடு இணைந்திருங்கள்

நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, நமது திராவிட மாடல். அரசுக்கும் தூணாக இருந்திடுங்கள் என்று கேட்டு அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து விடைபெறுகிறேன்.

 

 

Tags :

Share via