பட்டாசு ஆலை விபத்தில் 20 பேர் பலி
தாய்லாந்தில், மத்திய சுபன் புரி மாகாணத்தில் உள்ள சாலா காவ் நகருக்கு அருகில் உள்ள பட்டாசு ஆலையில்தான் இந்த பயங்கர வெடிவிபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தகவல் கிடைத்ததும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags :