பிரதமர் வருகை: சென்னையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு..

by Staff / 18-01-2024 04:42:03pm
பிரதமர் வருகை: சென்னையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு..

பிரதமர் வருகையையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுத்துறை செயலாளர் நந்தகுமார் தலைமையில் ஆலோசனை மேற்கொண்டனர். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் மற்றும் உயர் காவல் அதிகாரிகள், மத்திய அரசின் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்ற்றனர். ‘கேலோ இந்தியா’ போட்டிகளை துவங்கி வைக்க, நாளை பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். சென்னையில் நடைபெறும் விழாவில், ஆளுநர் ஆர். என். ரவி, முதல்வர் ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடி நாளை சென்னை வருவதையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி 22, 000 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் குழுவினர் மோப்ப நாய்கள் உதவியுடன் ஆங்காங்கே சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக பெங்களூரில் இருந்து தனி விமானத்தில் நாளை மாலை 4. 50 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கவுள்ளனர்.

 

Tags :

Share via