திமுக அமைச்சர் பெரியகருப்பன் உட்பட 8 திமுகவினர் மீது வழக்கு.. நீதிமன்றம் உத்தரவு.

by Editor / 19-01-2024 09:14:08pm
திமுக அமைச்சர் பெரியகருப்பன் உட்பட 8 திமுகவினர் மீது வழக்கு.. நீதிமன்றம் உத்தரவு.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் பட்டமங்கலம் என்ற இடத்தில் 
கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது  திமுக அதிமுகவினரி டையே நடந்த மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் அடிப்படையில் பெரியகருப்பன் உட்பட 8 திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பெரியகருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையில் ஆஜரான அமைச்சரின் வழக்கறிஞர், சம்பவம் நடந்தபொழுது அமைச்சர் அங்கு இல்லை என வாதிட்டார். இதனையடுத்து சிவகங்கை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குக்கு 4 வாரங்கள் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

 

Tags : திமுக அமைச்சர் பெரியகருப்பன் உட்பட 8 திமுகவினர் மீது வழக்கு.. நீதிமன்றம் உத்தரவு..

Share via