கழிவு நீர் வெளியேற்றுவது தொடர்பாக மோதல் 9 பேருக்கு அரிவாள் வெட்டு

by Editor / 23-01-2024 11:47:05pm
கழிவு நீர் வெளியேற்றுவது தொடர்பாக மோதல்  9 பேருக்கு அரிவாள் வெட்டு

திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் அருகே உள்ள செல்விபுரத்தில் வசிப்பவர் உதயகுமார்(45). இவரது குடும்பத்தில் பூபதி, உஷா மற்றும் விமல் பிரகாஷ்ஆகியோர் உள்ளனர். இவர்களது பக்கத்து வீட்டில் இசக்கிதுரை(42) சங்கர பாண்டி (40), உமா, இந்து மகா மற்றும் பேச்சியம்மாள் (61) வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களது வீட்டில் இருந்து கழிவு நீர் வெளியேறுவது தொடர்பான ஏற்பட்ட தகராறில் இரு குடும்பத்தினரும் அரிவாளால் மாறி மாறி வெட்டிக்கொண்டுள்ளனர். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முன்னீர்பள்ளம் போலீஸார், காயமடைந்த 9 பேரையும் மீட்டு நெல்லை அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இரு குடும்பத்தினர் மோதல் அரிவாள் வெட்டு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags : கழிவு நீர் வெளியேற்றுவது தொடர்பாக மோதல் 9 பேருக்கு அரிவாள் வெட்டு

Share via