தமிழக காவல் துறையை சுதந்திரமாக சட்டப்படி செயல்பட அனுமதிக்க வேண்டும் இபிஎஸ்

by Editor / 14-08-2022 03:54:57pm
தமிழக காவல் துறையை  சுதந்திரமாக சட்டப்படி செயல்பட அனுமதிக்க வேண்டும் இபிஎஸ்

தமிழக காவல்துறையை சுதந்திரமாக சட்டப்படி செயல்பட அனுமதித்து சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். அவர் தனது அறிக்கையில் சென்னையில் பட்டப்பகலில் தனியார் வங்கியில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு ஒரு கும்பல் தப்பி சென்ற செய்தி தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது குறிப்பிட்டுள்ளார். வெளிமாநிலங்களில் இருந்து கொள்ளையர்கள் சர்வசாதாரணமாக சென்னை மற்றும் முக்கிய நகரங்களுக்கு வந்து கொள்ளையடித்து விட்டு தப்பி செல்வதாகவும் குற்றவாளியை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via