பட்டியலின மாணவி விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது உளுந்தூர்பேட்டை அருகே வசிக்கும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மாணவி முன்வைத்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தது. சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் தலைமறைவாக உள்ள நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினரின் குடும்பத்தைச் சேர்ந்த குற்றவாளிகளை திமுக அரசு காப்பாற்றி வருவதாகவும், அதனை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி வியாழக்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சற்று முன்னர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Tags :