பொய்களால் கோர்க்கப்பட்ட மோசடி பட்ஜெட் - திருமாவளவன்

by Staff / 02-02-2024 12:51:43pm
பொய்களால் கோர்க்கப்பட்ட மோசடி பட்ஜெட் - திருமாவளவன்

 இடைக்கால பட்ஜெட்டை நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இடைக்கால பட்ஜெட் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்,  மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் ‘இடைக்கால பட்ஜெட்’ முழுக்க முழுக்க பொய்களைக் கொண்டு கோர்க்கப்பட்டிருக்கிறது. மோடி அரசின் தோல்வியை காட்டும் பட்ஜெட் இது. 28 பக்கங்களைக் கொண்ட பட்ஜெட் உரையை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் படித்தார். 24 பக்கங்களைக் கொண்ட பட்ஜெட்டின் முதல் பகுதி முழுவதும் கடந்த ஐந்தாண்டு கால பாஜக அரசின் சாதனைகள் எனப் பலவற்றை அவர் பட்டியலிட்டார். 4 பக்கங்கள் மட்டுமே கொண்ட பட்ஜெட்டின் இரண்டாம் பகுதியில்தான் நேரடி மற்றும் மறைமுக வரிகள் பற்றியும் பொருளாதார நிலை குறித்தும் பேசப்பட்டிருக்கிறது. பழைய வரிகளே தொடரும், புதிய வரி எதுவும் இல்லை, வரி விலக்கும் இல்லை என்பதைத்தான் அந்தப் பகுதியில் நிதியமைச்சர் கூறியிருந்தார். தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட் என்பதால் கவர்ச்சிகரமான பல அறிவிப்புகள் இதில் செய்யப்படும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. அப்படி எந்தவொரு அறிவிப்பும் பட்ஜெட் உரையில் இல்லை என்றார்.

 

Tags :

Share via