ஐயப்பனை தேடிச் சென்றவருக்கு .20 கோடி பரிசு

by Staff / 03-02-2024 01:40:59pm
ஐயப்பனை தேடிச் சென்றவருக்கு .20 கோடி பரிசு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்ற போது, பக்தர் ஒருவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.20 கோடி பரிசுத் தொகை விழுந்துள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த 33 வயதான பக்தர் ஒருவர் சமீபத்தில் சபரிமலைக்கு சென்ற போது அங்கு, ரூ.400 மதிப்புடைய சிறப்பு லாட்டரி சீட்டு வாங்கி வந்துள்ளார். கேரள அரசின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் லாட்டரி குலுக்கல் கடந்த 24ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 45 லட்சம் சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. தற்போது, எக்ஸ் சி 224091 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வரி, கமிஷன் உள்ளிட்டவை பிடித்தம் போக ரூ.12.60 கோடி கிடைக்கும் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via