ரூ.29-க்கு பாரத் அரிசி விற்பனை இன்று தொடக்கம்.

by Editor / 06-02-2024 09:45:49am
ரூ.29-க்கு பாரத் அரிசி விற்பனை இன்று தொடக்கம்.

நாடு முழுவதும் அரிசி விற்பனை விலை பன்மடங்காக அதிகரித்துள்ளதால், மக்களின் சுமையை போக்க மத்திய அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, 'பாரத் அரிசி' விற்பனை இன்று மாலை 4 மணிக்கு துவங்குகிறது. இதன் மூலம் ஒரு கிலோ அரிசி ரூ.29-க்கு விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் உள்ள கடமைப் பாதை மைதானத்தில் 'பாரத் அரிசி' விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைக்கிறார். சிறப்பு கவுன்ட்டர்கள் மூலம் பாரத் அரிசி விற்பனை செய்யப்படும். ஏற்கனவே பாரத் ஆட்டா, பாரத் பருப்பு என்ற பெயரில் சலுகை விலையில் கோதுமை மாவு, பருப்பு வகைகள் விற்கப்படுகிறது.இந்த அரிசி பைகள் 5,10 கிலோ பாக்கெட்டாக விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags : ரூ.29-க்கு பாரத் அரிசி விற்பனை இன்று தொடக்கம்.

Share via