பஞ்சு மிட்டாய் விவகாரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

by Staff / 10-02-2024 05:08:20pm
பஞ்சு மிட்டாய் விவகாரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை எழும்பூரில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "ரசாயனம் கலந்த கலர் பஞ்சு மிட்டாய் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். சுற்றுலா மையங்களில் பஞ்சு மிட்டாய் விற்கப்படுகிறதா? என ஆய்வு செய்ய கூறியுள்ளேன். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பஞ்சு மிட்டாய்களை ஆய்வு செய்து விசாரித்து அறிக்கை அளித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என தெரிவித்தார்.

 

Tags :

Share via