பாட்டாளிமக்கள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

by Staff / 14-02-2024 02:02:34pm
பாட்டாளிமக்கள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

 

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இன்று மாலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற உள்ள இடையிலாடும் ஊஞ்சல் எனும் புத்தக வெளியிட்டு விழாநடைபெற உள்ளது.இது சம்மந்தமாக கடந்த 8ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளரும் கவிஞருமான திலகபாமா அவர்களுக்கு முகநூலில் பதிவிட்டு கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்த நிலையில் சில மணி நேரத்திலேயே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் எழுத்தாளருமான கவின்மலர் பாட்டாளி மக்கள் கட்சியும் அதன் நிறுவனர் ஐயா ராமதாஸ் தலைவர் மற்றும் மாநில பொருளாளரும் கவிஞருமான திலகபாமா அவர்களை சாதி வெளியற்கள் போல சித்தரித்து முகநூலில் பதிவிட்டார் அதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழு  த்தாளர் சங்கத்தின் பொறுப்பாளர் தமிழ்செல்வனும் சரியான பதிவு தான் என்ற முறையில் பதிவிட்டிருந்தார்.

அதனை கண்டித்தும் உடனடியாக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மேலும் இந்த விழாவிற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொள்ள இருப்பதை அறிந்து பாட்டாளிமக்கள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில் நிர்வாகிகள் பலர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து விபரத்தை எடுத்து கூறி நீங்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் மனுவினை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ள மாட்டேன் என்று உறுதியளித்தார்


 


 

 

Tags :

Share via