எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை சிறைபிடித்த 20 மீனவர்கள் விடுதலை.

by Editor / 16-02-2024 12:18:59pm
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை சிறைபிடித்த 20 மீனவர்கள் விடுதலை.

 நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 20 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த 23ம் தேதி இலங்கை கடற்படை சிறைபிடித்தது. 23 பேரில் 20 பேரை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை என்ற நிபந்தனையுடன் இன்றுநீதிமன்றம்  விடுவித்தது.விடுதலை செய்யப்பட்ட 20 மீனவர்கள் சட்டரீதியான நடவடிக்கைகளை நிறைவு செய்த பிறகு தாயகம் திரும்புகின்றனர்.

 

Tags : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை சிறைபிடித்த 20 மீனவர்கள் விடுதலை.

Share via