பங்குச்சந்தை முன்னாள் மேலாண் இயக்குனர் சித்ரா வீட்டில் வருமான வரி ஆய்வு

by Admin / 17-02-2022 04:09:23pm
 பங்குச்சந்தை முன்னாள் மேலாண் இயக்குனர் சித்ரா வீட்டில் வருமான வரி ஆய்வு

தேசிய பங்குச்சந்தை முன்னாள் மேலாண் இயக்குனர் சித்தி ராமகிருஷ்ணன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 2013 ஏப்ரல் முதல் 2016 டிசம்பர் வரை தேசிய பங்குச்சந்தை மேலாண்மை இயக்குனராக பணியாற்றினார்.

அப்போது சித்ரா தனது ஆலோசகராக ஆனந்த சுப்பிரமணியன் என்பவரை நியமித்ததில்  விதிமீறல் உள்ளதாக கூறி செபி அமைப்பு விசாரித்து வருகிறது.

பங்குச்சந்தை தொடர்பான தகவல்களை இமயமலையிலுள்ள சாமியாரிடம் பகிர்ந்து கொண்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில் மும்பையில் உள்ள சித்திர ராமகிருஷ்ணனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான வளாகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் சென்னை கோட்டூர்புரத்தில் ஊரிலும் சித்ராவுக்கு தொடர்பான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

வரி ஏய்ப்பு புகாரை அடுத்து இந்த சோதனை நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

 

Tags :

Share via