வெண்கலம் வென்ற பி வி சிந்துவிற்கு தில்லியில் பாராட்டு விழா பதிவு செய்த நாள்

by Editor / 04-08-2021 09:52:28am
வெண்கலம் வென்ற பி வி சிந்துவிற்கு தில்லியில் பாராட்டு விழா பதிவு செய்த நாள்

டோக்கியோ 2020 ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்று, ஒலிம்பிக் போட்டியில் தனது 2-ஆவது பதக்கத்தைப் பெற்றுள்ளார் பி.வி. சிந்து.

டோக்கியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை பி.வி. சிந்து இந்தியாவுக்கு திரும்பியுள்ளார்பயிற்சியாளர் பார்க் டே-சாங்- உடன் வந்திருந்த சிந்துவுக்கு தில்லி விமான நிலையத்தில் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பி வி சிந்து மற்றும் பயிற்சியாளர் பார்க் டே-சாங் ஆகியோருக்கு மத்திய விளையாட்டுதுறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பாராட்டு தெரிவித்தார்.மேலும் பயிற்சியாளர் பார்க் டே-சாங்-க்கு பொன்னாடையை அணிவித்தார் அமைச்சர் அனுராக் தாக்கூர்

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் டாக்கூர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோர் பாராட்டு விழாவில் பங்கேற்றனர்

 

Tags :

Share via