கிருஷ்ணகிரி, ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு

by Editor / 18-02-2024 10:47:20am
கிருஷ்ணகிரி, ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மற்றும் ஜவளகிரி பகுதிகளில் காட்டு யானைகள் தாக்கியதில் வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் 2 பசுமாடுகளும் உயிரிழந்துள்ளன. சம்பவ இடத்தில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து வனத்துறை விசாரணை நடத்துகிறது. யானைகளை வனப்பகுதிகளுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Tags : கிருஷ்ணகிரி, ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு

Share via