இதுதான் சமூக நீதியா - ராமதாசு கேள்வி

by Staff / 18-02-2024 01:39:36pm
இதுதான் சமூக நீதியா - ராமதாசு கேள்வி

டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்கள் நியமனமனத்தில் தமிழகத்தின் தனிப்பெரும் சமூகத்தை புறக்கணிப்பது தான் சமூகநீதியா? என பாமக தலைவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கூட வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. தமிழ்நாட்டின் தனிபெரும் சமுதாயம் வன்னியர் இனம். அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராகவும், உறுப்பினராகவும் நியமிக்க தகுதியான பலர் அச்சமுதாயத்தில் உள்ள நிலையில், அவர்களை புறக்கணிப்பது தான் சமூக நீதியா? வாழ்க தமிழக அரசின் சமூகநீதி என பதிவிட்டுள்ளார் ‌

 

Tags :

Share via