த்ரிஷாவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஜெயக்குமார்

by Staff / 21-02-2024 03:03:13pm
த்ரிஷாவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஜெயக்குமார்

அதிமுகவின் முன்னாள் நிர்வாகி ஒருவர், கூவத்தூர் சம்பவம் குறித்து சில சர்ச்சையான கருத்துகளை பகிர்ந்தார். அதில் நடிகை த்ரிஷா குறித்து பேசிய கருத்துகள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதற்கு பல தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில் “பெண்மையை இழிவுபடுத்தக் கூடாது. நடிகை த்ரிஷா மிகவும் மனம் வருந்தி அந்தப் பதிவை எழுதியிருக்கிறார். அந்த காணொலியில் பேசப்பட்ட விஷயங்களை கேட்கும்போதே அருவருப்பாக இருந்தது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via