சிலிண்டர் வாங்க முடியாத அளவுக்கு விலை உயருகிறது கத்தரிக்காயை கடித்த எம்.பி

by Editor / 01-08-2022 08:28:50pm
சிலிண்டர் வாங்க முடியாத அளவுக்கு விலை உயருகிறது கத்தரிக்காயை கடித்த எம்.பி

கடந்த 2 வாரங்களாக நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், "சிலிண்டர் வாங்க முடியாத அளவுக்கு விலை உயருகிறது; பச்சையாக காய்கறிகளை சாப்பிட வேண்டும் என அரசு நினைக்கிறதா" எனக் கூறி கத்தரிக்காயை கடித்துக் காட்டினார் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. ககோலி கோஷ். தொடர்ந்து "சிலிண்டர் விலை உயர்வு ஏழை மக்களை எப்படி பாதிக்கிறது என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். கடந்த சில மாதங்களில் நான்கு மடங்கு விலை உயர்ந்துள்ளது. ஏழைகள் 1100 ரூபாய் எப்படி செலவழிப்பார்கள்? என கேள்வி எழுப்பினார்.

 

Tags : The price is rising so much that it is impossible to buy a cylinder MP who bit the eggplant

Share via