கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது

by Editor / 01-08-2022 08:19:46pm
 கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது

கேரளாவில் வருகிற 5ஆம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருச்சூர், மலப்புரம் மாவட்டங்களிலும் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவுறுத்தி இருக்கிறார். மழையால் ஏற்படும் பாதிப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.

 

Tags : Red alert has been issued for 7 districts in Kerala

Share via