தனியார்மருத்தகத்தில் ஊசிபோட்ட கூலித் தொழிலாளி உயிரிழப்பு-சீல்வைப்பு.
வெள்ளாளப்பட்டியில் பூபதி என்பவருக்கு சொந்தமான மருந்தகத்தில் அதே பகுதியை சேர்ந்தகூலித் தொழிலாளி சின்னப்பையன் (52) உடலில் அரிப்பு ஏற்பட்டதால் மருந்தகத்தில் சென்று ஊசி போட்டு உள்ளார்.
அப்போது மருந்தகத்தின் வெளியே திடீரென சின்ன பையன் மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியைச் சேர்ந்த போது மக்கள் 108 ஆம்புலன்ஸ் இருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் அவர்கள் வந்து பரிசோதித்த போது ஏற்கனவே சின்ன பையன் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.போராட்டம் உருவானது.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஏத்தாப்பூர் போலீசார் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சின்னப் பையனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மருந்தகத்திற்கு பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அன்புச் செழியன் தலைமையில் வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.இது குறித்து புகாரின் பேரில் ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தப்பி ஓடிய மருந்துக உரிமையாளரை வலை வீசி தேடி வருகின்றன.மருந்தகத்தில் உரிமை இல்லாமல் ஊசி போட்டு ஒருவர் இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
Tags :